• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷிச்சின்பிங்கின் நான்கு கருத்துக்கள்
  2014-09-18 19:43:06  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் 18ஆம் நாள் புதுதில்லியில் இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியாவை, சீனாவின் நீண்டகால நெடுநோக்கு ஒத்துழைப்புக் கூட்டாளியாக சீனா கருதுகிறது. இந்தியாவுடன் இணைந்து மேலும் நெருக்கமான உறவை உருவாக்கி, இருதரப்பு, பிரதேசம் மற்றும் முழு உலகளவில் இரு நாட்டு ஒத்துழைப்பை ஆழமாக்க வேண்டும் என்று ஷிச்சின்பீங் தெரிவித்தார். மேலும், இது குறித்து, அவர் நான்கு முக்கிய கருத்துக்களை முன்வைத்தார்.

ஒன்று, இரு தரப்பும் இரு நாட்டுத் தலைவர்களின் வழிக்காட்டிப் பங்கினையைப் பயன்படுத்தி, உயர்நிலை தொடர்ப்பை நிலைநிறுத்தி, பல்வேறு நிலையான பரிமாற்றங்களை வலுப்படுத்த வேண்டும்.

இரண்டு, வளர்ச்சித் திட்டத்தின் படி, இரு தரப்பும் பயனுள்ள ஒத்துழைப்பு நிலையை பன்முகங்களிலும் உயர்த்தி, தகவல், அடிப்படை வசதிகள், தொழில் பூங்கா, அறிவியல் தொழில் நுட்பம், நாணயம் முதலிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவாக்க வேண்டும்.

மூன்று, வங்காள தேசம்-சீனா-இந்தியா-மியன்மர் பொருளாதார தரைவழிக் கட்டுமானத்தை விரைவுபடுத்தி, பட்டுப்பாதை பொருளாதாரப் மண்டலம், 21ஆம் நூற்றாண்டு கடல் வழி பட்டுப்பாதை உள்ளிட்ட ஒத்துழைப்பை வளர்க்க வேண்டும்.

நான்கு, இரு தரப்பும், சர்வதேச விவகாரங்களிலான தொடர்ப்பையும் ஒருங்கிணைப்பையும் வலுப்படுத்தி, வளரும் நாடுகளின் கூட்டு நலன்களைப் பேணிகாக்க வேண்டும் என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040