• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷிச்சின்பிங்கின் சொற்பொழிவுக்கு இந்தியாவின் பல்வேறு துறையினரின் மதிப்பீடு
  2014-09-19 09:40:10  cri எழுத்தின் அளவு:  A A A   
இந்திய உலக விவகார கமிட்டியின் அழைப்பை ஏற்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 18-ஆம் நாள் அங்கே சென்று, கைகோர்த்து தேசத்தின் மறுமலர்ச்சி கனவைத் தேடுவதென்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார்.இதற்காக, பல துறைகள் அடங்கிய இச்சொற்பொழிவானது, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே இரு நாட்டு மக்களுக்கிடையே புரிந்துணர்வு மற்றும் தொடர்பை பெருமளவில் அதிகரிக்கும் என்று இந்தியாவின் பல்வேறு துறையினர் கருத்து தெரிவித்தனர்.
இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் கார்காஸ் பேசுகையில், ஷிச்சின்பிங்கின் சொற்பொழிவானது 250கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய-சீன நட்பு ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றத்துக்கு பல பயனுள்ள கருத்துக்களை வழங்கியுள்ளது என்று தெரிவித்தார்.
இந்திய உலக விவகார கமிட்டியின் நிபுணர் மீஷ்ரா கூறுகையில், இன்றைய சிக்கலான உலக நிலைமையில், இந்திய-சீன உறவு நாளுக்கு நாள் முக்கியத்துவம் பெற்று வருகின்றது. இரு நாட்டு ஒத்துழைப்பானது, இரு தரப்பும் வெற்றி பெறும் சாதனையை தரும் என்று தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040