இந்தியப் பொருளாதாரத்தின் பெரிய வளர்ச்சியை நனவாக்க வேண்டும் என்று தலைமை அமைச்சர் நரேந்திர மோடி செப்டம்பர் 28ஆம் நாள் நியூயார்க் மாநகரில் அமெரிக்காவில் வாழும் இந்திய மக்களுக்கு உறுதிமொழி அளித்தார். அவரின் தலைமையில், இந்தியா கண்டிப்பாகப் பின்னடைவு அடையாது என்று மோடி பேசினார்.
நியூயார்கின் மேதிசன் சதுக்கத்திலுள்ள பூங்காவில் அமெரிக்காவில் வாழும் இந்திய மக்களிடம் உரை நிகழ்த்தினார். வேறு நாடுகளை விட, இந்தியா மூன்று மேம்பாடுகளை கொண்டுள்ளது. அதாவது, ஜனநாயகம், மக்கள் அமைப்பின் மேம்பாடு மற்றும் மாபெரும் சந்தை தேவை என்று அவர் விளக்கினார்.
18 ஆயிரத்திற்கு மேலான அமெரிக்காவில் வாழும் இந்திய மக்கள் மோடியின் உரையைக் கேட்டதாக செய்தி ஊடகங்கள் தெரிவித்தன.