2014ஆம் ஆண்டு சீன அரசின் நட்பு விருது பெற்றுள்ள வெளிநாட்டு நிபுணர்களை சீனத் தலைமை அமைச்சர் லீ கெச்சியாங் 30ஆம் நாள் பெய்ஜிங்கில் சந்தித்து பேசினார்.
சீன அரசு மற்றும் மக்களின் சார்பில் லீ கெச்சியங் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, சீனச் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு அவர்களது பங்களிப்புக்கு நன்றியும் தெரிவித்தார்.
சீனாவின் வெளிநாட்டு திறப்பு மற்றும் திறமைசாலிகளை ஈர்ப்பது மேலும் பரந்த அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலக நாடுகளுடன் நல்லுறவு, ஒத்துழைப்பு, கூட்டு வெற்றி ஆகிய குறிக்கோள்களை அடைவதை சீனா பின்பற்றும் என்று லீ கெச்சியங் கூறியுள்ளார்.