அமெரிக்காவில் முதல்முறையாக எபோலா நோயாளி ஒருவர் கண்டறியப்பட்டுள்ளார் என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் 30ஆம் நாள் செவ்வாய்கிழமை அறிவித்துள்ளது.
இந்த நோயாளி கடந்த செப்டம்பர் 19ஆம் நாள் விமானம் மூலமாக லைபீரியா நாட்டில் இருந்து புறப்பட்டு 20ஆம் நாள் அமெரிக்காவுக்கு திரும்பினார். இவ்விரு நாட்களில் நோய் தொற்றிக் கொண்ட அறிகுறி ஏதுவும் காணவில்லை. ஆனால், 4, 5 நாட்களுக்குப் பிறகு நோய் அறிகுறி தோன்றியது. செப்டம்பர் 26ஆம் நாள் அவர் முதல்முறையாக மருத்துவமனைக்குச் சென்றார். 30ஆம் நாளன்று அவருக்கு எபோலா நோய் தொற்றிக் கொண்டது உறுதியானது என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தலைவர் டாம் ஃபிரிதான் தெரிவித்தார்.