• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நிறைவுபெற்ற ஐ.நா.வின் பொது விவாதம்
  2014-10-01 18:12:59  cri எழுத்தின் அளவு:  A A A   

ஐ.நா. பொது பேரவையின் 69-வது கூட்டத் தொடரில் பொது விவாதம் செப்டம்பர் 30ஆம் நாள் நியூயார்க்கிலுள்ள தலைமையகத்தில் நிறைவுபெற்றது.

நடப்புப் பொது பேரவையின் தலைவர் சாம் குடேசா தொகுப்புரை நிகழ்த்தியபோது,

அமைதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை, இவ்வாண்டு பொது விவாதத்தில் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். 'இஸ்லாமிக் ஸ்டேட்', 'அல்-கொய்தா' போன்ற பயங்கரவாத அமைப்பு மற்றும் தீவிரவாத அமைப்பு ஏற்படுத்தியுள்ள அச்சுறுத்தல்கள் குறித்து பல பிரதிநிதிகள் விவாதத்தில் மிகுந்த கவலை தெரிவித்துள்ளனர். உலக நாடுகளும் இணைந்து செயல்பட்டு இத்தகைய அமைப்புகளை ஒழிக்குமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

உலக நாடுகள் ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொண்டு, மேற்கு ஆப்பிரிக்காவில் பரவிய எபோலா நோயை தடுக்க வேண்டும் எனவும் பல நாடுகளின் பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டுள்ளனர் என்று சாம் குடேசா தனது உரையில் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040