ஏபெக் என சுருக்கமாக அழைக்கப்படும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்களது கூட்டத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளை, சீனா நவம்பர் 5 முதல் 11 ஆம் நாள் வரை பெய்ஜிங்கில் நடத்தும் என்று சீன வெளியுறவு அமைச்சகம் 30ஆம் நாள் செவ்வாய்கிழமை வெளியிட்டது.
உயர்மட்ட அதிகாரிகள் கூட்டம் நவம்பர் 5, 6 ஆகிய நாட்களில் கடைசிமுறையாக நடைபெறும். அமைச்சர் நிலை கூட்டம் 7, 8 ஆகிய நாட்களில் நடைபெறும். இவ்வமைப்பின் 22-வது உச்சி மாநாடு 10, 11 ஆகிய நாட்களில் நடைபெறும். இந்த கூட்ட வாரத்தில் தொழில் மற்றும் வணிக தலைவர்கள் கூட்டம் உள்ளிட்ட பிற நிகழ்ச்சிகளும் நடைபெறும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவா ச்சுன்யிங் அம்மையார் விவரித்தார்.