கடந்த சில நாட்களில், ஈராக்கின் தலைநகர் பாக்தாத் மற்றும் சுற்றுப்புற மாநிலங்களில் ஐஎஸ் அமைப்பு பல தாக்குதல்களை உண்டாக்கியது. அவற்றில் ஈராக் மக்கள் பலர் உயிரிழந்தனர்.
இத்தாக்குலுக்குக் காரணமானவரை ஈராக் அரசும் சர்வதேச சமூகமும் கைது செய்ய வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பவை வேண்டுகோள் விடுத்தது. மேலும், பல்வேறு நாடுகளும் அமைப்புகளும் கூட்டு முயற்சி மேற்கொண்டு, ஐஎஸ் அமைப்பு, அல்காய்தா இயக்கம் ஆகியவற்றுடன் தொடர்புடைய தனிநபரையும் குழுக்களையும் ஒடுக்க வேண்டும் என்று அது வலியுறுத்தியது. தவிரவும், ஐஎஸ் உள்ளிட்ட ஆயுதக்குழுக்களை ஒடுக்கும் வகையில், ஈராக் அரசு மற்றும் பாதுகாப்பு படைக்கான ஆதரவை சர்வதேச சமூகம் மேலும் வலுப்படுத்தி அதிகரிக்க வேண்டும் என்றும் ஐ.நா. பாதுகாப்பவை வற்புறுத்தியது.