• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஹாங்காங்கில் நிகழ்ந்த மோதலுக்கு கண்டனம்
  2014-10-19 18:11:48  cri எழுத்தின் அளவு:  A A A   
ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் சட்டமியற்றல் அவையின் 41 உறுப்பினர்களும் பல அரசியல் குழுக்களும் 18ஆம் நாள் அறிக்கைகளை வெளிட்டு, மாங்கொக் இடத்தில் நிகழ்ந்த வன்முறை மோதலுக்குக் கண்டனம் தெரிவித்தனர்.

17ஆம் நாள் ஆர்ப்பாட்டக்காரர்கள் மாஹ்கொக் நகரில் மீண்டும் ஒன்றுகூடி, காவற்துறையினர் உருவாக்கிய பாதுகாப்பு கோட்டை வன்முறையில் சீர்குலைத்தனர். அதில் 10க்கு மேற்பட்ட காவற்துறையினர் காயமுற்றனர். அவர்கள் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி, நகரவாசிகளின் அன்றாட வாழ்க்கையைப் பாதித்தனர். சட்டமியற்றல் அவை உறுப்பினர்கள் வெளியிட்ட அறிக்கையில், இணையத்தளத்தின் மூலம் பொது மக்களைத் தூண்டிவிட்டு, மாங்கொக் இடத்தில் வன்முறை மோதலை உண்டாக்கிய சட்டத்தை மீறியவர்களுக்குக் கண்டனம் தெரிவித்தனர். வன்முறை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள இணையத்தளத்தின் மூலம் பொது மக்களைத் தூண்டிவிட்ட செயல், சட்ட விரோதமானதாகவும் ஆபத்தானதாகவும் உள்ளது. இது கடும் உயிரிப்பை ஏற்படுத்தக்கூடும். இத்தகைய சட்ட விரோதமான செயலை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். காவற்துறை கூடியவிரைவில் நடவடிக்கையை மேற்கொண்டு இச்சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040