சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த எஸ்.க்யு.424 எனும் பயணியர் விமானம் 18ஆம் நாளன்று சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு இந்தியாவின் மும்பைக்குச் செல்லும் வழியில் வலிமைமிக்க காற்று ஓட்டத்தால், பாதிக்கப்பட்டது. இதில், 8 பயணிகள் மற்றும் 14 விமான பணியாளர்கள் உள்பட 22 பேர் காயமடைந்தனர். இவ்விபத்து குறித்து புலனாய்வு செய்யப்பட்டு வருகிறது.