ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் நிதி அமைச்சர்களின் 21வது கூட்டம் அக்டோபர் 22ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற உள்ளது. இவ்வமைப்பைச் சேர்ந்த 21 நாடுகளின் நிதி அமைச்சர்கள், சர்வதேச அமைப்புகளின் பொறுப்பாளர்கள், தனியார் அமைப்புகளின் உயர் நிலை பிரதிநிதிகள் ஆகியோர், பிரதேச ஒட்டுமொத்த பொருளாதார நிலைமை உள்ளிட்ட 4 அம்சங்கள் குறித்து விவாதம் நடத்தவுள்ளனர். சீன நிதி அமைச்சகம் 20ஆம் நாள் இதைத் தெரிவித்தது.
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பானது, ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் மிக உயர் நிலை மற்றும் செல்வாக்கு வாய்ந்த பொருளாதார ஒத்துழைப்பு மன்றமாகும். எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு ஆசிய-பசிபிக் கூட்டு உறவைக் கூட்டாக உருவாக்குவது என்ற தலைப்பிலான 2014ஆம் ஆண்டின் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்களின் உச்சி மாநாடைச் சீனா ஏற்பாடு செய்ய உள்ளது.