• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஒத்த கருத்துக்கள் காணப்பட்ட சீன-இந்திய கலந்தாய்வு
  2014-10-20 19:33:51  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன-இந்திய எல்லைப் பகுதியின் அமைதி மற்றும் நிலைப்புத் தன்மையைப் பேணிக்காக்கும் நடவடிக்கைகள் குறித்து இருதரப்பும் மனம் திறந்த நட்பார்ந்த கலந்தாய்வு மூலம் ஒத்த கருத்துக்கள் பலவற்றை உருவாக்கியுள்ளன என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் அம்மையார் 20ஆம் நாள் தெரிவித்துள்ளார்.

இருநாட்டு தலைவர்கள் உருவாக்கிய முக்கிய கருத்துக்கிணங்க, அக்டோபர் 16, 17ஆம் நாட்களில் இருதரப்பும் எல்லை விவகாரத்துக்கான கலந்தாய்வு மற்றும் ஒருங்கிணைப்பு அமைப்பு முறையின் கூட்டத்தை புதுதில்லியில் நடத்தின. இருதரப்புகளுக்கிடையில் குறிப்பிட்ட காலச் சந்திப்பு அமைப்பு முறையை உருவாக்குவது, எல்லைப் பகுதியில் சந்திப்பு இடத்தை நிறுவுவது, இருநாட்டு ராணுவத் தலைமையகங்களுக்கிடையில் தொலைபேசி சேவையை வழங்குவது, முன்னணி பாதுகாப்புப் படைப்பிரிவுகளுக்கிடையில் செய்தித்தொடர்பை உருவாக்குவது ஆகியவை குறித்து இருதரப்பும் உடன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்த நடவடிக்கைகள் இருதரப்பிடையே நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கும், எல்லை விவகாரங்களை உரிய முறையில் கையாளுவதற்கும் துணைபுரியும் என்று ஹுவா சுன்யிங் கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040