இருநாட்டு தலைவர்கள் உருவாக்கிய முக்கிய கருத்துக்கிணங்க, அக்டோபர் 16, 17ஆம் நாட்களில் இருதரப்பும் எல்லை விவகாரத்துக்கான கலந்தாய்வு மற்றும் ஒருங்கிணைப்பு அமைப்பு முறையின் கூட்டத்தை புதுதில்லியில் நடத்தின. இருதரப்புகளுக்கிடையில் குறிப்பிட்ட காலச் சந்திப்பு அமைப்பு முறையை உருவாக்குவது, எல்லைப் பகுதியில் சந்திப்பு இடத்தை நிறுவுவது, இருநாட்டு ராணுவத் தலைமையகங்களுக்கிடையில் தொலைபேசி சேவையை வழங்குவது, முன்னணி பாதுகாப்புப் படைப்பிரிவுகளுக்கிடையில் செய்தித்தொடர்பை உருவாக்குவது ஆகியவை குறித்து இருதரப்பும் உடன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்த நடவடிக்கைகள் இருதரப்பிடையே நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கும், எல்லை விவகாரங்களை உரிய முறையில் கையாளுவதற்கும் துணைபுரியும் என்று ஹுவா சுன்யிங் கூறினார்.