ஐ﹒நா தலைமைச் செயலாளர் பான்கிமுன் இஸ்ரேல் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் மோஷி யா அலோனை 20ஆம் நாள் நியூயார்கிலுள்ள ஐ﹒நா தலைமையகத்தில் சந்தித்துரையாடினார். பாலஸ்தீனமும் இஸ்ரேலும் பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்கும் முக்கியத்துவத்தைப் பான்கிமுன் சந்திப்பின் போது வலியுறுத்தினார்.
மேலும், காசா பிரதேசத்தின் மறுசீரமைப்பை முன்னேற்ற, இஸ்ரேல் தற்காலிக அமைப்பு முறையை உருவாக்குவதற்குப் பான்கிமுன் தன்னுடைய வரவேற்பையும் ஆதரவையும் தெரிவித்தார். இந்த ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டுமென அவர் விருப்பம் தெரிவித்தார்.