அடுத்த ஆண்டு ஜனவரி திங்கள் இலங்கை அரசுத் தலைவருக்கான தேர்தல் நடக்கும் என்றும் சரியான தேதி இன்னும் வெளியாக வில்லை என்றும் இலங்கை செய்தித் துறை அமைச்சர் க்ஹெலிய ரென்புக்வெலா 20ஆம் நாள் அறிவித்தார். பொது மக்கள் மதம் மற்றும் இன வேற்றுமையைக் கைவிட்டு, தேசிய நலன்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென்றும் அவர் கூறினார்.
எதிர்க்கட்சி அதிகாரப்பூர்வமாகக் கோரிக்கை விடுத்தால், 2015ஆம் ஆண்டு முன்கூட்டியே அரசு தலைவர் தேர்தலை நடத்துவதாக இலங்கை அரசு தலைவர் ராஜபக்சே இவ்வாண்டு ஏப்ரல் தெரிவித்திருந்தார். முன்கூட்டியே இத்தேர்தலை நடத்துவது குறித்து அவர் வெளிப்படையாகப் பதில் அளிப்பது, இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.