பாலஸ்தீனப் பிரச்சினையைக் கூடிய விரைவில் தீர்க்கும் பொருட்டு பாலஸ்தீனமும் இஸ்ரேலும் கொள்கை ரீதியான அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்க வேண்டுமென்று ஐ.நாவுக்கான நிரந்தர சீனப் பிரதிநிதி லியு ச்சே யி 21ஆம் நாள் நியூயார்கில் அமைந்துள்ள ஐ.நா தலைமையகத்தில் வேண்டுகோள் விடுத்தார்.
பாலஸ்தீனத்திலுள்ள பல்வேறு பிரிவுகளிடையே ஒற்றுமையை வலுப்படுத்தி, தேசிய இனத்தின் ஒத்த கருத்துக்களைக் கொண்ட அரசைக் கூட்டாக ஆதரிக்க வேண்டும். அதே வேளை பாதுகாப்பு பற்றிய இஸ்ரேலின் நியாயமான கவனத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இவ்விரு தரப்பும், அமைதி மற்றும் பாதுகாப்பைக் கூட்டாகப் பகிர்ந்து கொண்டு, அவற்றைப் பேணிக்காக்க வேண்டும் என்று லியு ச்சே யி அன்று விருப்பம் தெரிவித்தார்.