2030ஆம் ஆண்டுக்கு பிறகு, ஸ்வீடன் நாட்டில் ரொக்கம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது. ஸ்வீடன், உலகில் ரொக்கம் இல்லாத முதல் நாடாக இருக்கும் என்று அந்நாட்டின் துணை பேராசிரியர் நிக்லாஸ் ஆர்விட்ச்சான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தற்போது, ஸ்வீடன் மக்கள் அனைவரும் அன்றாட வாழ்க்கையில் வங்கி அட்டைகளை பயன்படுத்துவது வழக்கமாகியுள்ளது.
ரொக்கம் செலுத்தாமல் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தும் வழிமுறை, பல நன்மைகளைத் தருகின்றன. நுகர்வோர் பாதுகாப்பை உறுதிச்செய்யும் அதேவேளையில், அது, பணத்தின் தயாரிப்புச் செலவை குறைக்க உதவும் என்று கூறப்படுகிறது.