வர்த்தகத்தை எளிதாக்கும் உடன்படிக்கையின் நடைமுறையாகத்தைத் தூண்டும் முயற்சி முன்னேற்றும் அடையவில்லை. 2 திங்கள்காலம் தொடர்ந்த தேக்கநிலை இன்னும் தீர்க்கப்படவில்லை என்று உலக வர்த்தக அமைப்பு 21ஆம் நாள் ஜெனீவாவில் தெரிவித்துள்ளது.
கடந்த ஜுலை திங்கள் இவ்வுடன்படிக்கை தொடர்பான முதல்குறிப்பு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதுவரை, தொடர்புடைய தரப்புகளுக்கிடையேயான முக்கிய கருத்துவேற்றுமைகள் தீர்க்கப்படவில்லை என்று இவ்வமைப்பின் செய்தித் தொடர்பாளர் ரோக்வெல் அன்று நடைபெற்ற கூட்டத்துக்குப் பின் கூறினார். நாட்டின் தானிய சேமிப்பு மற்றும் அதற்கான நிதியுதவி பற்றிய இந்தியாவின் நிலைப்பாடு, இவ்வுடன்படிக்கை பாதிக்கப்பட்டதற்கு முக்கியக் காரணம் எனத் தெரிகிறது.
தற்போதைய தேக்க நிலையை மாற்ற, வர்த்தகத்தை எளிதாக்கும் உடன்படிக்கை, தானிய சேமிப்பு, உணவுப் பாதுகாப்பு உள்ளிட்டவை தொடர்பான புதிய சுற்று கலந்தாய்வை உலக வர்த்தக அமைப்பு 22ஆம் நாள் முதல் முயற்சியுடன் மேற்கொண்டு வருகிறது.