• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
காஷ்மீர் எல்லையில் மீண்டும் பதற்றம்
  2014-10-22 18:55:02  cri எழுத்தின் அளவு:  A A A   
ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் மற்றும் இந்திய ராணுவ வீரர்கள், இருநாட்டு பாதுகாப்பு நிலைகள் மீதும் புதன்கிழமை பரஸ்பரம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜம்மு மற்றும் சம்பா மாவட்டங்களில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடந்துள்ளது. இதனால், அப்பகுதியில் நடைபெற்று வந்த நெற்பயிர் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. இத்து

ப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டியுள்ளன.

இந்திய நிலைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினால் பாகிஸ்தான் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி கூறிய ஒருசில நாள்களுக்கு உள்ளேயே இத்துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040