மிகுதியும் வளர்ச்சியடையாத நாடுகளுக்கும், வளரும் நாடுகளுக்கும் தொடர்ந்து ஆதரவளித்து, அந்நாடுகள் சந்திக்கும் பல்வேறு சவால்களையும் பாதிப்பையும் சமாளிக்க அவற்றிற்குத் தேவையான ஆதரவினைச் சர்வதேசச் சமூகம் அளிக்க வேண்டுமென ஐ.நாவுக்கான நிரந்தர சீனத் துணை பிரதிநிதி வாங் மின் 23ஆம் நாள் கூறினார்.
சிறப்பு நிலையில் சிக்கியுள்ள நாடுகள் எனும் தலைப்பில் 69வது ஐ.நா பேரவையின் இரண்டாவது ஆணையம் அன்று நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்ட போது வாங் மின் இவ்வாறு தெரிவித்தார். வாக்குறுதியை நடைமுறைப்படுத்தி, பல்வேறு சிக்கல்களை ஆக்கப்பூர்வமாகச் சமாளிப்பதில் அந்த நாடுகளுக்குத் தேவையான ஆதரவினைச் சர்வதேசச் சமூகம் அளிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.