இலங்கையின் வுவா மாநிலத்தின் பாதுல்லா பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக நீடித்த கன மழையின் காரணமாக, 29ஆம் நாள் கடும் நிலச்சரிவு நிகழ்ந்தது. இது வரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். 150க்கும் மேலான வீடுகள் புதைந்துள்ளன என்று இலங்கை இயற்கை சீற்றக் கட்டுப்பாட்டு மையத்தின் செய்தித்தொடர்பாளர் சாலாத் தெரிவித்தார்.