உக்ரைன் கிழக்கு பகுதியின் அரசு சாரா ஆயுததாரிகள், நவம்பர் 2ஆம் நாள் உள்ளூர் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்றத்துக்கான தேர்தலை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் இத்தேர்தலை ஏற்றுக்கொள்ளாது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு நடவடிக்கை வாரியம் 29ஆம் நாள் அறிவித்துள்ளது.
நடத்தப்படவுள்ள இத்தேர்தல், மின்ஸ்க் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் புறம்பானது. இந்த நடவடிக்கை அரசியல் முறையில் உக்ரைன் பிரச்சினையைத் தீர்க்கும் போக்கிற்குத் தடையை உருவாக்கும் என அவ்வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.