இலங்கை ரப்பர் ஆய்வகமும், சீன CETC International கூட்டு நிறுவனமும் இணைந்து உள்ளூர் ரப்பர் தொழிலை வளர்ப்பது பற்றிய புரிந்துணர்வு குறிப்பாணையை உருவாக்கியுள்ளன. இலங்கையின் "கொழும்பு பேஜ்" என்ற இணையத் தளம் 29ஆம் நாள் இச்செய்தியை வெளியிட்டது.
பன்முக ஆய்வுக்கூடத்தின் உருவாக்கம், அடிப்படை வசதி மேம்பாடு, தொழில் நுட்ப உதவி ஆகிய துறைகளிலான ஒத்துழைப்புகள் ஆகியன இப்புரிந்துணர்வு குறிப்பாணையில் அடங்குகின்றன. பன்முக ஆய்வுக்கூடத்தை உருவாக்குவது தொடர்பான இந்தப் புரிந்துணர்வு குறிப்பாணை, இலங்கையின் நடுத்தர மற்றும் சிறிய ரப்பர் தொழில் நிறுவனங்கள், ரப்பர் பொருட்களின் உற்பத்தி நிறுவனங்கள், ரப்பர் வர்த்தக கூட்டு நிறுவனங்கள், ரப்பர் இறக்குமதி கூட்டு நிறுவனங்கள், ஆய்வு பணியாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கல்வியியலாளர்கள் ஆகியோருக்கு உரிய வசதிகளை அளிக்கும்.