இலையுதிர்காலத்தின் கடைசிக் கட்டத்தில் பெய்ஜிங் இருக்கிறது. பெய்ஜிங்கிலுள்ள தியாவ் யூ தை என்ற பகுதியின் அருகில், சிங்கோ மரங்கள் வரிசையாக அணிவருத்து நிற்கின்றன. கடந்த சில நாட்களில் இந்த மரங்களின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறியுள்ளதால், அங்குள்ள சாலைகளும் மஞ்சள் வர்ணத்துடன் காட்சி அளிக்கின்றன. இதனைக் காண வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஆண்டுதோறும் இக்காலத்திலேயே பயணிகள் இங்கு வருகை தந்து நிழற்படம் எடுத்து பத்திரப்படுத்துவது வழக்கமாகியுள்ளது.