போஆவ் ஆசிய கருத்தரங்கின் ஆளுநன்கள் குழுவின் பணிக்கூட்டத்தில் பங்கேற்றுள்ள பிரதிநிதிகளை, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் புதன்கிழமை பெய்ஜிங்கில் சந்தித்துப் பேசினார்.
சீனாவின் வளர்ச்சிப் போக்கு மற்றும் ஆசியாவின் எதிர்கால வளர்ச்சி குறித்து ஷி ச்சின்பிங் சந்திப்பில் பிரதிநிதிகளிடம் கூறினார். சீனாவின் வளர்ச்சி ஆசியாவுடன் நெருங்கிய தொடர்பு உடையது. ஆசிய நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்புக்கு அதிக வாய்ப்புள்ளது. ஒளிமிக்க வளர்ச்சி எதிர்காலம் உண்டு. இந்நிலையில், ஒன்றுக்கொன்று பயனை அளிக்கும் கொள்கையை பின்பற்றி, ஆசிய நாடுகளும் கூட்டாக வளர்ச்சி மற்றும் செழுமையை அடைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆசியாவின் பொதுக் கருத்துக்களை உருவாக்குவதிலும், ஆசியாவின் வளர்ச்சியை முன்னேற்றுவதிலும், ஆசியாவின் செல்வாக்கை உயர்த்துவதிலும், போஆவ் ஆசிய கருத்தரங்கு சிறப்பான முக்கியமான பங்களிப்பை அளித்துள்ளது. சீன அரசு இக்கருத்தரங்கின் வளர்ச்சியை தொடர்ந்து ஆதரித்து வருகிறது என்றும் ஷிச்சின்பிங் குறிப்பிட்டார்.