கடந்த மார்ச் முதல் நாள் சீனாவின் குன்மிங் ரயில் வண்டி நிலையத்தில் நிகழ்ந்த கடுமையான வன்முறை குற்ற வழக்கு பற்றி யூன்னான் மாநிலத்தின் உயர் நிலை மக்கள் நீதிமன்றத்தில் அக்டோபர் 31ஆம் நாள் 2ஆவது முறை வெளிப்படையான விசாரணை செய்யப்பட்டது.
இவ்வழக்குடன் தொடர்புடைய ஐயத்துக்குரியவர்கள் செய்த குற்றம் தெளிவாக உள்ளது. அதற்கான சாட்சியம் உண்மையாகவும் போதுமானதாகவும் உள்ளது. அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை சரியாக உள்ளது. எனவே, குற்றவாளிகளின் முறையீட்டை நிராகரித்து முதல் விசாரணைக்கான தீர்ப்பை நிலைநிறுத்துவதாக இந்த நீதிமன்றம் இறுதி தீர்ப்பளித்துள்ளது.