• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலக நகர் நாள்
  2014-10-31 14:51:15  cri எழுத்தின் அளவு:  A A A   

முதலாவது உலக நகர் நாள் பற்றிய நடவடிக்கை அக்டோபர் 31ஆம் நாள் சீனாவின் ஷாங்காய் மாநகரில் துவங்கியது. சீனத் தலைமை அமைச்சர் லீ கே ச்சியாங்கும் ஐ.நா தலைமைச்செயலாளர் பான் கீமூனும் இந்நடவடிக்கைக்கு வாழ்த்துச் செய்தியை அனுப்பினர்.
நகரங்களின் மேம்பாடும் வளர்ச்சியும் என்பது இவ்வாண்டு நடவடிக்கையின் தலைப்பாகும். புதிய காலத்தில் நகரங்களின் வளர்ச்சி பற்றி மக்களின் கருத்தையும் செயல்பாட்டையும் இது காட்டுகின்றது என்று லீ கே ச்சியாங் தன்னுடைய வாழ்த்துச் செய்தியில் கூறினார்.
2010ஆம் ஆண்டு ஷாங்காய் உலக பொருட்காட்சியின் போது உலக நகர் நாள் என்பதை உருவாக்க வேண்டுமென்ற கருத்து ஆரம்பித்தது என்று பான் கீமூன் தெரிவித்துள்ளார். நகரங்களின் எதிர்கால வளர்ச்சி பற்றி பல்வேறு நாடுகளும் ஆழமாக ஆராய வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040