ஆப்கானிஸ்தான் பிரச்சினை பற்றிய இஸ்டம்புல் முன்னேற்றப் போக்கின் 4வது வெளியுறவு அமைச்சர் கூட்டம் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த ஆப்கானிஸ்தான் பிரச்சினை பற்றிய ஐ.நா தலைமை செயலரின் சிறப்புப் பிரதிநிதி குபிஷைச் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ 30ஆம் நாள், சந்தித்துரையாடினார்.
ஆப்கானிஸ்தானின் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் ஐ.நா. மேலதிகமாக பங்களிப்பை வழங்குவதற்குச் சீனா ஆதரிப்பதாக வாங் யீ கூறினார்.