பாலஸ்தீனத்தின் நாடு என்ற தகுநிலையை ஸ்வீடன் அதிகாரப்பூர்வமாக ஏற்றுகொண்டது. அத்துடன், பாலஸ்தீனத்தின் வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்கும் வகையில், 5 ஆண்டுகள் நீடிக்கும் சுமார் 20 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள நிதியுதவி திட்டத்தை ஸ்வீடன் தொடங்கியுள்ளது என்று ஸ்வீடன் வெளியுறவு அமைச்சகம் அக்டோபர் 30ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஸ்வீடன் இந்த முடிவைப், பாலஸ்தீன அரசுத் தலைவர் முகமாத் அப்பாஸ் 30ஆம் நாள் பாராட்டினார். துணிவு மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு இதுவாகும் என்று அவர் தெரிவித்தார்.