இவ்வாண்டு டிசம்பர் முதல் நாள், சீன அறிவியல் கழகம் நிறுவப்பட்டு 65ஆம் ஆண்டுகள் நிறைவடைகிறது.
இதனை முன்னிட்டு இக்கழகத்தைச் சேர்ந்த சர்வதேச ஒத்துழைப்பு பணியகத்தின் தலைவர் சௌ ஜிங்ஹுவா கூறுகையில், உலகில் மிகப் பெரிய வளரும் நாடுகளான சீனாவும் இந்தியாவும், விண்வெளி அறிவியல் உள்ளிட்ட துறைகளில் பெரும் சாதனைகளைப் பெற்றுள்ளன. விண்வெளி அறிவியல் துறையில் இவ்விரு நாடுகள் மேம்பாடுகளைப் பயன்படுத்தி ஒத்துழைத்தால், சர்வதேச விண்வெளி அறிவியலின் வளர்ச்சியைப் பெரிதும் முன்னேற்றும் என்று குறிப்பிட்டார்.