சீனாவின் சந்திர ஆய்வுப் பயணத் திட்டத்தின் 3-ஆவது கட்டச் சோதனை நடந்து வருகிறது. அதாவது, புவியில் இருந்து சந்திரனுக்குச் சென்று மீண்டும் புவிக்கு திரும்பும் விண்கலம் ஒன்று சோதனை செய்யப்பட்டு வருகிறது. திட்டமிட்டப்படி, இந்த விண்கலம் வரும் நவம்பர் முதல் நாள் சீனாவின் உள்மாங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தின் மத்திய பகுதியில் தரையிறங்க உள்ளது.
தற்போது, இதற்கு பல்வகை பணிகள் தயாராகியுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.