முதலாவது உலக இணைய மாநாடு நவம்பர் 19 முதல் 21ஆம் நாள் சீனாவின் செச்சியாங் மாநிலத்தின் ஊச்செங் பேரூரில் நடைபெறவுள்ளது. சீனத் தேசிய இணையத் தகவல் அலுவலகம் மற்றும் செச்சியாங் மாநில அரசு இம்மாநாட்டை ஏற்பாடு செய்தன. உலக இணைய நிர்வாகம், செல்லிட இணையம், எல்லை கடந்த மின்னணு வணிக அலுவல், இணையப் பாதுகாப்பு, பயங்கரவாதம் ஆகியவை, இம்மாநாட்டின் தலைப்புகளாகும்.