குடியேறுவோர் பற்றிய அரசுத் தலைவர் கட்டளையில் அமெரிக்க அரசுத் தலைவர் பாராக் ஒபாமா கையொப்பமிட்டார். 20ஆம் நாளிரவு தொலைக்காட்சி உரையில் அவர் இதை அறிவித்தார்.
குடிமைச் சீட்டுக் காலத்தைத் தாண்டி அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்து வரும் மக்கள், அரசிடம் பதிவு செய்து, அனுமதியைப் பெற்ற பிறகு, தற்காலிகமாக அமெரிக்காவில் வாழ்ந்து வேலை செய்யலாம் என்று ஒபாமா அறிவித்தார்.
இக்கட்டளைக்கு முன்நிபந்தனை ஒன்று உள்ளது. இந்த மாதிரி மக்களின் குழந்தைகள், அமெரிக்காவில் பிறந்து, அமெரிக்க குடிமக்களாக மாற வேண்டும் அல்லது அமெரிக்க பச்சை அட்டையை வைத்திருக்க வேண்டும். அது மட்டுமல்ல, பெற்றோர்கள் குறைந்தது 5 ஆண்டுகாலங்களாவது அமெரிக்காவில் வாழ வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.