நேபாளத்தில் அடுத்த வாரம் நடைபெற உள்ள சார்க் மாநாட்டில் பாகிஸ்தான் தலைமை அமைச்சர் நவாஷ் ஷெரீப் கலந்து கொள்வார் என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், இம்மாநாட்டின்போது அவர் இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடியை அதிகாரப்பூர்வமாகச் சந்திக்கும் திட்டம் இல்லை என்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தஸ்னிம் அஸ்லாம் தெரிவித்தார்.
சார்க் மாநாடு, நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் நவம்பர் 26 மற்றும் 27 ஆகிய நாள்கள் நடைபெறுகிறது.
சார்க் அமைப்பில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், மாலத்தீவு மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.