இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்கள் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
புலவாமா மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு இச்சம்பவம் நடைபெற்றது.
புலவாமா மாவட்டத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படை மற்றும் போலீஸார் மீது வாகனத்தில் வந்த ஒரு கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியது. தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் நடத்திய பதிலடித் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். வாகனத்தில் 5 பேர் வந்த்தாகவும், அதில் 2 பேர் தப்பிச் சென்று விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.