• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
எபோலா நோயை 2015ஆம் ஆண்டுக்குள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும்
  2014-11-22 16:24:21  cri எழுத்தின் அளவு:  A A A   
சர்வதேசச் சமூகம் எபோலா நோய் தடுப்புப் பணியைத் தொடர்ந்து வலுப்படுத்தினால், 2015ஆம் ஆண்டுக்குள் மேற்காப்பிரிக்காவில் எபோலா நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியுமென ஐ﹒நா தலைமை செயலாளர் பான்கிமுன் 21ஆம் நாள் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், தற்போது, எபோலா நோய் தடுப்புப் பணியை மேற்கொண்டுள்ள இடங்களில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. ஆனால், பல்வேறு இடங்களின் நிலைமை வேறுப்பட்டது. அண்மையில் மாலி நாட்டின் நிலைமை கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அந்நாட்டின் எபோலா நோய் தடுப்புப் பணிக்கு உதவியளிக்க, உலகச் சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் மாகாரேக் ச்சான் உள்ளீட்டோரை மாலிக்கு அனுப்பிட பான்கிமுன் வலியுறுத்தினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040