சீனா:எபோலா நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளின் மறுசீரமைப்புப் பணிகளுக்கு உதவி வேண்டுகோள்
எபோலா நோய் தடுப்புப் பணியில் தொடர்புடைய தரப்புகள் வாக்குறுதியை நடைமுறைப்படுத்திப் பாதிக்கப்பட்ட நாடுகளின் மறுசீரமைப்புக்கு உதவியளிக்க வேண்டும். தற்போது தடுப்புப் பணியில் அடைந்த பயன்களை வலுப்படுத்த வேண்டும். 21ஆம் நாள் நடைபெற்ற எபோலா நோய் நிலைமை பற்றிய ஐ﹒நாவின் கூட்டத்தில் ஐ﹒நாவுக்கான சீன நிரந்தர பிரதிநிதி லியுஜெயீ இவ்வாறு தெரிவித்தார்.
ஐ﹒நாவும் உலகச் சுகாதார அமைப்பும் எபோலா நோய் நிலைமையின் கண்காணிப்பை மற்றும் கட்டுப்பாட்டைத் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும். தொடர்புடைய தரவுகளை சீக்கிரமாகவும் சரியாகவும் திரட்டி ஆய்வு செய்ய வேண்டுமென அவர் கூறினார்.