• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அடுத்த ஆண்டு அமெரிக்க அரசுத் தலைவரின் இந்திய பயணம்
  2014-11-22 17:47:17  cri எழுத்தின் அளவு:  A A A   

இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமா அடுத்த ஆண்டு ஜனவரில் இந்தியாவில் பயணம் மேற்கொள்ள போவதாக, அமெரிக்க வெள்ளை மாளிகை 21ஆம் நாள் வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.

பயணத்தின்போது புது தில்லியில் நடைபெறும் இந்திய குடியரசு நாள் கொண்டாட்டத்தில் ஒபாமா பங்கேற்பார். அவர் முதல்முறையாக இக்கொண்டாட்டத்தில் கலந்து கொள்வது குறிப்பிடத் தக்கது. மேலும், மோடி உள்ளிட்ட இந்திய உயர் அதிகாரிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாண்டு செப்டம்பரில், நரேந்திர மோடி அமெரிக்காவில் 5 நாள் பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040