• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஜப்பான் அரசு மீது சீனா கோரிக்கை
  2014-11-23 16:10:27  cri எழுத்தின் அளவு:  A A A   
தியோயூ தீவு மற்றும் யசுகுனி கல்லறை பிரச்சினைகள் தொடர்பாக ஜப்பான் அமைச்சரவை நவம்பர் 23ஆம் நாள் எழுத்து மூலமாக பதில் அளித்தது. இது குறித்து சீனாவின் கருத்து என்ற செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளிக்கையில், சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹொங்லேய் 22ஆம் நாள் கூறியதாவது, பண்டைகாலம் தொட்டு தியோயூ தீவு மற்றும் அதனைச் சேர்ந்த தீவுகள் சீனாவின் உரிமைப் பிரதேசமாகும். அவற்றின் மீது சீனா சர்ச்சை கொள்ளாத அரசுரிமையைக் கொண்டுள்ளது. நாட்டின் உரிமைப் பிரதேசத்தின் இறையாண்மையைப் பேணிக்காப்பதில் சீனா உறுதியாக நிற்கும். சீன உரிமைப் பிரதேசத்தின் இறையாண்மையைப் பாதிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் ஜப்பான் நிறுத்த வேண்டுமென சீனா கோரியுள்ளது என்றார் ஹொங்லேய்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040