• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பொது இடங்களில் புகைபிடிக்கக் கட்டுப்பாடு
  2014-11-25 09:33:35  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவில் பொதுவிடங்களில் புகைபிடிப்பதைத் தடுக்கும் பொருட்டுப் புதிய விதிமுறைகளை, சீனா 24-ஆம் நாள் வெளியிட்டது. இப்புதிய சட்டத்தின்படி, வணிக வளாகங்கள், அரவலகங்கள் போன்ற பொதுக் கட்டிடங்களின் உள்ளே புகைபிடிக்கக் கூடாது. சீனாவில் நாடு முழுமையும் தேசிய சட்ட விதிகள் மூலம் புகைபிடிப்பைக் கட்டுப்படுத்துவது இதுவே முதன்முறையாகும்.

2012-ஆம் ஆண்டு வரை, பொது இடங்களில் புகைபிடிப்புக் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு பற்றிய சட்டம், உலகின் 100க்கு மேலான நாடுகளில் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக, 44 நாடுகளில் பன்முகங்களிலும் புகைபிடிப்பதைத் தடுக்கும் வகையில் புதிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040