சீனாவில் பொதுவிடங்களில் புகைபிடிப்பதைத் தடுக்கும் பொருட்டுப் புதிய விதிமுறைகளை, சீனா 24-ஆம் நாள் வெளியிட்டது. இப்புதிய சட்டத்தின்படி, வணிக வளாகங்கள், அரவலகங்கள் போன்ற பொதுக் கட்டிடங்களின் உள்ளே புகைபிடிக்கக் கூடாது. சீனாவில் நாடு முழுமையும் தேசிய சட்ட விதிகள் மூலம் புகைபிடிப்பைக் கட்டுப்படுத்துவது இதுவே முதன்முறையாகும்.
2012-ஆம் ஆண்டு வரை, பொது இடங்களில் புகைபிடிப்புக் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு பற்றிய சட்டம், உலகின் 100க்கு மேலான நாடுகளில் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக, 44 நாடுகளில் பன்முகங்களிலும் புகைபிடிப்பதைத் தடுக்கும் வகையில் புதிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.