• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சர்வதேச நினைவு மாநாட்டுக்கு சீன அரசுத் தலைவரின் வாழ்த்துச் செய்தி
  2014-11-25 15:33:37  cri எழுத்தின் அளவு:  A A A   
பாலஸ்தீன மக்களுடன் ஒன்றுபடுவது தொடர்பான சர்வதேச தினத்துக்கான நினைவு மாநாடு, நவம்பர் 24ஆம் நாள் ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இம்மாநாட்டுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.

ஆயுதத்தினால் அமைதியைக் கொண்டு வர முடியாது. பேச்சுவார்த்தை தான் கருத்துவேற்றுமையைத் தீர்க்கும் ஒரேயொரு வழிமுறை என்பதை வரலாறு திரும்ப திரும்ப நிரூபியுள்ளது. பாலஸ்தீனமும் இஸ்ரேலும் கூடிய விரைவில் அமைதி பேச்சுவார்த்தையைத் தொடங்கி, சமாதானத்துக்கு வாய்ப்புகளை உருவாக்கி, மக்களுக்கு அமைதியை வழங்க வேண்டும் என்று சீனா விரும்புவதாக ஷிச்சின்பிங் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040