2014ஆம் ஆண்டு லத்தீன் அமெரிக்க நாடுகளில் செல்வாக்குமிக்க ஐவர் பட்டியல் ஒன்றை, அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை என்ற இதழ், அண்மையில் வெளியிட்டது.
உலகில் மிக வறிய அரசுத் தலைவராக கருதப்படுகிற உருகுவே நாட்டுத் அரசுத் தலைவர் ஜோஸ் முஜிகா இப்பட்டியலில் இடம்படித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
அரசுத் தலைவராக பதவியேற்ற அவருக்கு மாளிகை இல்லை. புறநகரிலுள்ள விவசாயப் பண்ணையில் அவர் வாழ்ந்து வருகிறார். மேலும், அவர், தனது மாத ஊதியத் தொகையின் 90 விழுக்காட்டுப் பகுதியை நாட்டின் பொதுநலத் திட்டத்துக்கு அளித்து வருகிறார். அவருக்கு 2லட்சம் அமெரிக்க டாலர் மட்டும் மதிப்புள்ள சொத்து உண்டு என்று வெளியுறவுக் கொள்கை இதழ் செய்தி வெளியிட்டது.
சிரியாவின் அகதிகள் உருகுவே நாட்டிற்கு குடிபெயர்வதற்கு ஜோஸ் முஜிகா 2014ஆம் ஆண்டு அனுமதி அளித்தார். இது தான், செல்வாக்குமிக்கவர் பட்டியலில் அவர் சேர்க்கப்பட்டதன் மிக முக்கிய காரணமாகும்.
சிரியாவின் அகதிகளைப் பெறும் வகையில், சிறிய நாடான உருகுவே லத்தீன் அமெரிக்காவில் முதலாவது நாடு என்பது குறிப்பிடத் தக்கது. இவ்வாண்டு சிரியாவைச் சேர்ந்த 42 அகதிகள் உருகுவே நாட்டில் தங்களுடைய புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளனர். வரும் 2015ஆண்டு மேலும்