போ ஆவ் ஆசிய மன்றத்தின் நிதி ஒத்துழைப்புக் கூட்டம் 24ஆம் நாள் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் துவங்கியது. ஆசிய முதலீட்டு வங்கியைக் கட்டியமைக்கும் குறிப்பாணையில் சீனா, இந்தியா, சிங்கப்பூர் உள்பட 21 உறுப்பு நாடுகள் அண்மையில் அதிகாரப்பூர்வமாகக் கையொப்பமிட்டன. இந்த ஆசிய முதலீட்டு வங்கி 2015ஆம் ஆண்டின் இறுதியில் செயல்படத் திட்டமிட்டுள்ளதாகக் கூட்டத்தில் கலந்து கொண்ட போ ஆவ் ஆசிய மன்றத்தின் தலைமை செயலாளர் சோவுன்துங் 24ஆம் நாள் தெரிவித்தார்.
ஆசிய முதலீட்டு வங்கியின் கட்டுமானத்துக்கு ஆசியாவின் தொடர்புடைய நாடுகளும் வரவேற்பைத் தெரிவித்துள்ளன.