2015ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் நாள் வரை, ஈரான் மீது விதிக்கப்பட்ட தடை தற்காலிகமாக நீக்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் 25ஆம் நாள் அறிவித்துள்ளது.
ஈரான் அணு ஆற்றல் பிரச்சினையுடன் தொடர்பான ஆறு நாடுகள், அதாவது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா, சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகளும், ஈரானும், கூட்டு நடவடிக்கை திட்டத்தின் கால வரம்பை அடுத்த ஆண்டின் ஜூன் இறுதி வரை நீடித்துள்ளன என்பதன் அடிப்படையில் இம்முடிவு எடுக்கப்பட்டது என்று ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் வெளியிட்ட செய்தித்தாளில் தெரிவித்தது.