• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையை தொடங்க இந்தியா முன்வர வேண்டும் – நவாஷ் ஷெரீப்
  2014-11-26 10:50:54  cri எழுத்தின் அளவு:  A A A   
இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையைத் தொடங்க இந்திய அரசு முன்வர வேண்டும் என பாகிஸ்தானின் தலைமை அமைச்சர் நவாஷ் ஷெரீப் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் சிறப்பு விமானம் மூலம் காத்மாண்டுவுக்கு செவ்வாய்க்கிழமை புறப்பட்டபோது இவ்வாறு தெரிவித்தார்.

இருதரப்பு உயர்நிலையிலான பேச்சுவார்த்தையை இந்திய அரசு நிறுத்தியது. அதனால், அப்பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க இந்தியா முன்வர வேண்டும் என்று தெரிவித்தார்.

புது தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள், காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர்களை கடந்த ஆகஸ்ட் மாதம் சந்தித்தனர். அதனைத் தொடர்ந்து, இரு தரப்பிலான பேச்சுவார்த்தையை இந்தியா நிறுத்தியது குறிப்பிடத் தக்கது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040