• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்தியாவும், நேபாளமும் 10 உடன்படிக்கைகளில் கையொப்பம்
  2014-11-26 10:51:46  cri எழுத்தின் அளவு:  A A A   
இந்தியாவும், நேபாளமும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, இரு தரப்பிலும் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பது, எல்லைப் பகுதியில் போக்குவரத்து ஏற்படுத்துவது என மொத்தம் 10 உடன்படிக்கைகளில் கையொப்பமிட்டன.

நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் 8 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் சார்க் உச்சி மாநாடு புதன்கிழமை தொடங்கியது. இதில் கலந்து கொள்வதற்காக இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, நேபாளத்தை செவ்வாய்க்கிழமை சென்றடைந்தார். அதைத் தொடர்ந்து இந்த உடன்படிக்கைகள் கையெழுத்தாயின.

மேலும், மோட்டார் வாகன ஒப்பந்தப்படி காத்மாண்டுவில் இருந்து புது தில்லி வரை செல்லும் பயணிகள் பேருந்தை இரு நாட்டு தலைமை அமைச்சர்களும் கொடி அசைத்துத் தொடங்கு வைத்தனர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040