சார்க் அமைப்பின் 18ஆவது உச்சி மாநாடு 26ஆம் நாள் நேபாளத்தின் காட்மாண்டுவில் துவங்கியது.
இதற்கு முன்னதாக, இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தீவிர சண்டை நிகழ்ந்தது. அதனால் இருநாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை தடையானது. இந்நிலையில் இவ்விரு நாடுகளின் தலைமை அமைச்சர்கள் நடப்பு உச்சி மாநாட்டை வாய்ப்பாகக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்துவார்களா என்பது, ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கும் குவி முக்கியப் பகுதி.