• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தெற்காசியாவுக்கும் சீனாவுக்குமிடை நெருங்கிய தொடர்பு
  2014-11-27 16:28:35  cri எழுத்தின் அளவு:  A A A   
18ஆவது சார்க் உச்சிமாநாடு 26, 27ஆம் நாள் நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டில் நடைபெற்றது. அதில் சீனா பார்வையாளர் நாடாக கலந்து கொண்டது. சீனப் பிரதிநிதிக் குழுவின் தலைவர் லியூச்சேன்மின் துவக்க விழாவில் உரை நிகழ்த்தினார். அதில் அவர் கூறுகையில், சீனா மற்றும் 8 தெற்காசிய நாடுகளிலுள்ள 5 நாடுகளின் எல்லைகள் இணைந்துள்ளன. சீனாவும் 8 தெற்காசிய நாடுகளும் நல்ல அண்டை நாடுகளாகவும் நண்பர்களாகவும் இருக்கும். தெற்காசியாவுடன் சீனா நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது. 2006ஆம் ஆண்டு சார்கின் பார்வையாளர் நாடாகிய பின்பு, பொருளாதாரம், வேளாண் தொழில், வறுமை ஒழிப்பு முதலிய துறைகளில் சீனா சார்குடனான ஒத்துழைப்பை ஆழமாக்கி வருகிறது. இனி, சார்கின் கட்டுமானம் மற்று வளர்ச்சிக்கு சீனா ஆதரவையும் உதவியையும் தொடர்ந்து வழங்கும் என்று லியூச்சேன்மின் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040