• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திரு வூ லியாங் யூங்கின் படைப்புகள் கண்காட்சி
  2014-12-12 16:59:57  cri எழுத்தின் அளவு:  A A A   

கட்டிடக் கலைஞரான திரு வூ லியாங் யூங்கின் வாழ்க்கையில், அவர் ஓவியக் கலை மீதான அன்பைக் காட்டியுள்ளார். அவர் ஓவியத் திறனில் தேர்ச்சி பெற்றவர். சீனா மற்றும் பிறநாடுகளில் பயணம் மேற்கொள்ளும் போது, ஓவியர் மற்றும் கட்டிடக் கலைஞர் என்ற இரட்டை கண்பார்வையில், வாழ்க்கை மற்றும் இயற்கையை உற்று நோக்கி, ஓவியம் மூலம் தனது உணர்வை வெளிப்படுத்துகின்றார். அவரது நேர்த்தியான கைஎழுத்து படைப்புகள், தனிச்சிறப்பு வாய்ந்தவை. நேர்த்தியான கை எழுத்து படைப்புகளின் அம்சங்கள், கட்டிடக்கலை பற்றிய அவரது சிந்தனையுடன் தொடர்புடையவை.

சீன நுண்கலைக் காட்சியகத்தில் நடைபெற்ற இக்கண்காட்சியில், 1940ஆம் ஆண்டு முதல் திரு வூ லியாங் யூங் இயற்றிய சுமார் 100 நேர்த்தியான கை எழுத்து மற்றும் ஓவியப் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. தவிர, பெய்சிங் ஜுர் சாலையின் நாலா பக்க வீடுகளும் நடுவில் முற்றமும் கொண்ட புதிய கட்டிடம், கன்பிஃசியஸ் ஆய்வகம், சீன நுண்கலை கல்லூரி, சியாங் நிங் நெசவுக் காட்சியகம், தாய் ஷான் காட்சியகம் உள்ளிட்ட 6 பண்பாட்டுக் கட்டிடங்களின் வரைவு படைப்புகள் இக்கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. இக்கண்காட்சி மூலம் கல்வியியல் ஆய்வுப் போக்கில், கலை மீது திரு வூ லியாங் யூங் மேற்கொண்டுள்ள பிடிவாத ஆர்வம் பன்முகங்களிலும் வெளிப்படுத்தப்படுகின்றது.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040