16ஆம் நாள் மாலை, பெல்கரேடெயில், சீனத் தலைமை அமைச்சர் லீ க் ச்சியாங், 3ஆவது சீன-மத்திய கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் தலைவர் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டார். 16 மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர். லீ க் ச்சியாங்கும் செர்பிய தலைமை அமைச்சர் ஊசிஸும் இப்பேச்சுவார்த்தைக்கு கூட்டாகத் தலைமை தாங்கினர். சீனாவுக்கும் மத்திய கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பை ஆழமாக்குவது குறித்து இருத்தரப்பும் விவாதித்து, பொதுக் கருத்துகளை பெற்றன.
மத்திய கிழக்கு ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் இணைந்து, உலக வளர்ச்சிக்கும் செழுமைக்கும் பங்காற்ற சீனா விரும்புவதாக லீ க் ச்சியாங் தெரிவித்தார்.