பாகிஸ்தானின் வடமேற்கிலுள்ள பெஷவார் நகரில் உள்ள பள்ளி ஒன்று, 16ஆம் நாள் ஆயுததாரிகளின் தாக்குதலுக்கு உள்ளானது. இதில், குறைந்தது 141 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தோரில் 132 பேர் மாணவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இந்தத் தாக்குதலுக்கு சர்வதேசச் சமூகம் வன்மையான கண்டனங்களைக் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தான் அரசுத் தலைவரும் தலைமை அமைச்சரும் இந்தத் தாக்குதல் சம்வபத்தை வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
மேலும், ஐ.நா.வின் தலைமைச் செயலாளர் பான் கிமூன், அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமா, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஆகியோரும் இச்சம்பவத்திற்கு வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளனர்.